Tuesday, March 22, 2011

காமம் சான்ற கடைக் கோட் காலை ... (பகுதி 1)

தொல்காப்பியத்தில் ஒரு நூற்பா ...

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் கற்பியலில் காணப்படும் நூற்பா இது.

இதன் பொருள் எனக்குத் தெளிவாகக் கிடைக்கவில்லை.

நண்பர் திரு சொ. வினைதீர்த்தான் ஐயா மூலம் சில விளக்கம் கிடைத்தது.


இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய செம்பொருளை இடைவிடாது நினைத்தல் மனையறத்தின் கடந்த காலப் பயனாகும் -- இது முனைவர் ச.வே.சு உரை. 
கணேசய்யர் பதிப்பு: முன்பு இல்லறம் நிகழ்த்திய தலைவனும் தலைவியும் பின்னர் துறவறம் நிகழ்த்தி வீடு பெறுப என்கிறது.
இறந்ததின் பயன் -- நூலில் முற்கூறிய இல்லறத்தின் பயன்.
சான்ற காமம்- நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற சான்ற என்றார்.
ஏமம் சான்றவாவன-- வானப்பிரத்தமும் சன்னியாசமும்- மெய்யுணர்ந்து வீடு பெறுபவ என்றார்.


இந்த நூற்பாவில் ... "சிறந்தது பயிற்றல்" என்றால் என்ன என்று ஒரு கேள்வி. அதற்குத் தகுந்த விடை இன்னும் கிடைக்கவில்லை.

(... தொடரும் ...)
  





No comments:

Post a Comment