Tuesday, March 22, 2011

காமம் சான்ற கடைக் கோட் காலை ... (பகுதி 2)

இப்போதைக்கு ... என்னிடம் எல்லாத் தொகாப்பிய உரைகளும் இல்லை. இளம்பூரணர் உரை மட்டும் இருக்கிறது.


இளம்பூரணர் "சிறந்தது பயிற்றலாவது அறத்தின்மேல் மன நிகழ்ச்சி. சூத்திரத்தால் பொருள் விளங்கும்" என்று மட்டும் சொல்லியிருக்கிறார்! பல இடங்களில் இவர் ரொம்ப விளக்கமாட்டார்.

பதிப்பாளர் அடிக்குறிப்பிலிருந்து நச்சினார்க்கினியரின் உரை கொஞ்சம் தெரிகிறது:

"சிறந்தது -- அறம் பொருள் இன்பத்திற் சிறந்த வீட்டின்பம். சான்ற காமம் என்றார், நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற. ஏமஞ்சான்றவாவன - வானப்பிரத்தமும் சந்நியாசமும்."

இங்கே "ஏமம் சான்ற" என்பதைக் கொண்டு கூட்டி, "சிறந்தது பயிற்றல்" என்பதோடு சேர்த்த மாதிரிப் படுகிறது.

ஆனால், அந்த "ஏமம் சான்ற" என்பதை இயற்கையான வரவாக அதைத் தொடரும் "மக்களொடு" என்பதோடு சேர்க்க எனக்கு விருப்பம்.
 
இந்த நூற்பாவை விளங்கிக்கொள்ள அடிப்படையாகச் சில கருத்துக்களை எண்ணிப்பார்ப்பது நல்லது.  

+++++++++++++++++++++++++
1. காமம் சாலா நிலை -- கைக்கிளை
2. காமம் ஒத்த நிலை -- ஐந்திணை
3. காமம் மிக்க நிலை -- பெருந்திணை

இதற்கு அப்பாற்பட்ட நிலை "காமம் சான்ற" நிலை. அந்த நிலையில், என்ன (== "சிறந்தது") செய்தால் ... இதுவரையில் செய்துவந்ததற்கு (== "இறந்ததன்") பயன் இருக்கும் என்பதைச் சொல்லுகிறமாதிரி இருக்கிறது இந்த நூற்பா ("காமம் சான்ற கடைக்கோட் காலை...").

"வானப்பிரத்தம்" "சந்நியாசம்" ... எல்லாம் உரையாசிரியர்கள் கொண்டுவருவது. அதை அப்படியே ஏற்றுக்கொள்ளச் சிறிது தயக்கமாக இருக்கிறது.
++++++++++++++++++++++

( ... தொடரும் ... )

No comments:

Post a Comment