Sunday, January 31, 2016

தொல்காப்பிய "நறுக்" ... பகுதி 2 (முத்தை)


முத்தை
==========

தொல்காப்பிய 'நறுக்' … - பகுதி 1-இல் தொல்காப்பியர் பயன்படுத்திய "இம்பர்," "மிசை" என்ற சொற்களின் வரவு பற்றிப் பார்த்தோம். 

இந்தப் பகுதியில் (தொல்காப்பிய 'நறுக்' … - பகுதி 2) ...  முத்தை என்ற சொல்லைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன். என் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டவை: தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை.

முத்தை எனும் சொல் காணும் இடங்கள்:  

தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 165, பதிற்றுப்பத்து 85, சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை, மணிமேகலை 18: 144; 19: 13

முத்தை என்பதை உ.வே.சா தொடங்கிப் பலரும் முந்தை என்பதன் வலித்தல் விகாரம் என்கிறார்கள். அது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. தொல்காப்பியத்தில் முத்தை என்பதும் முந்தை என்பதும் தனித்தனியாக ஆளப்பட்டிருக்கின்றன. 

என்ன ஆனாலும் இந்தச் சொல் முத்து+ஐ என்ற பிரிவுக்குள் அடங்காது. 

உங்கள் கருத்து என்ன என்று தெரிந்துகொள்ள ஆவல். 

++++++++++

சரி, நம்ம கதைக்கு வருவோம். உங்கள் சிறுவர்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறீர்கள். 

நீங்கள்: தம்பீ, இப்ப மணி என்ன? 

பிள்ளை: ரெண்டு கால்

நீங்கள்: அப்படிச் சொல்லக்கூடாது.

பிள்ளை: ஏன்?

நீங்கள்: ரெண்டேகால்-னு சொல்லணும்.

பிள்ளை: ஏன்?

நீங்கள்: அப்படித்தான் சொல்லணும்.

பிள்ளை: போங்கம்மா/போங்கப்பா தமிழ் ரொம்ப difficult.

உங்கள் மூளைக்குள் ஒரு நெருடல். ஆமா, அது ஏன் இரண்டு என்பதுக்கும் கால் என்பதுக்கும் இடையில் ஒரு  வரணும்?

கவலற்க! நம்ம தொல்காப்பியர் அப்படித்தான் சொல்லிவச்சிருக்காரு! ;-)

++++++++++

இணையத்தில் அளவை அடுக்குப் பொருள்களின் படங்கள் கிடைக்கும் ( measuring spoons and cups )

அவற்றில் ஏதாவது ஓர் அளவையை (X என்று குறித்து) எடுத்துக்கொள்ளுவோம். அதுக்குத் தொட்டடுத்து உள்ளடங்கி, கீழாக, சிறிதாக ஓர் அளவை இருக்கு பாருங்கள், அதுதான் நாம் எடுத்துக்கொண்ட அளவைக்கு (X-க்கு) 'முத்தை.' இதை X-n என்று குறிப்போம். இதுவே தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா 165-இல் உள்ள 'முத்தை' என்ற சொல் குறிப்பது. 

கணித இயலில், factorial குறியீட்டில், காணும் "descending natural number(s)" என்ற கருத்து நினைவுக்கு வருகிறது. காட்டாக, 5! = 5 x 4 x 3 x 2 x 1 அல்லவா? 

இந்த 'முத்தை'யின் சிறப்பு என்னவென்றால் … இது வேறு எந்த ஒன்றினுக்கு உள்ளடங்கியிருக்கிறதோ அதற்கு அடிப்படை! இது (முத்தை) இல்லாமல் அந்த வேறொன்று உருவாகியிருக்க முடியாது. 2 இல்லாமல் 3 இல்லை; 4 இல்லாமல் 5 இல்லை, அல்லவா. 

இந்த மாதிரி இடங்களில் முதல் எண்ணுக்கும் தொடர்ந்துவரும் எண்ணுக்கும் இடையில் என்ற சாரியை வரும் என்பது தொல்காப்பியர் சொன்னது.

எடுத்துக்காட்டு: இரண்டேகால் (அளவு, எண், காலம்), முக்காலேமூணுவீசம் (நிறை)

++++++++++

'முத்தி'ப்போச்சு என்ற பேச்சுவழக்குக்கும் 'முத்தி' என்ற பழைய சொல்லுக்கும் தொடர்பு இருக்குமோ???



1 comment:

  1. அம்மா, ஓர் ஐயம். 'இரண்டேகால்', 'இரண்டேமுக்கால்' இரண்டிலும் 'ஏ' சாரியை இருக்கின்றது. ஆனால், 'இரண்டரை' என்பதில் வரவில்லை. ஏன்? அதுமட்டும், இரண்டு + அரை என்பதன் புணர்வாக அமைகிறதே!

    ReplyDelete