tag:blogger.com,1999:blog-1929201454702774815.post4095637161291410795..comments2023-04-12T01:20:28.604-07:00Comments on my tamil: மணிமேகலை -- உருவத்தோற்றம் ... (1) rasikaihttp://www.blogger.com/profile/07673040396630699804noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1929201454702774815.post-7190056510968827282012-12-22T05:42:07.122-08:002012-12-22T05:42:07.122-08:00கேள்வியே புதிது. பொதுவாகக் கதைமாந்தரின் பண்புகளைப்...கேள்வியே புதிது. பொதுவாகக் கதைமாந்தரின் பண்புகளைப் பற்றித்தான் பேசுவார்கள். அதற்காகக் கதைசொல்லும் வரிகளைப் புரட்டிப்புரட்டி ஆய்வார்கள். ஔவை அவர்கள் கூட இதைப்பற்றிச் சிந்தித்ததிலை என்பதை அவர் சொன்ன பதிலே கூறுகிறது. இது ஒரு புதிய பார்வை. ஓர் இலக்கியத்தைக் கணிதமுறையில் நான் ஆய்வுசெய்ய முனைந்த ஆரம்பக் காலங்களில், "இலக்கியத்தின் ஆன்மாவை விட்டுவிட்டு, வெறும் மேனியைத் தடவிப் பார்க்கிறீர்களே" என்று ஏளனம் செய்தவர்கள் உண்டு. தாங்களும் ஒரு கணிதமாணவி என்பதாலோ என்னவோ, இப்படிப் பார்க்க, மாணவப் பருவத்திலேயே உங்களைத் தூண்டியிருக்கிறது இந்தச் சிந்தனை. தொடரும் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.<br />ப.பாண்டியராஜா<br />P.Pandiyarajahttps://www.blogger.com/profile/06312613331405758978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1929201454702774815.post-3757840199314248272012-12-22T01:07:40.412-08:002012-12-22T01:07:40.412-08:00மணிமேகலையின் இன்றைய காலை தரிசனம் எனக்கு நன்றாகவே அ...மணிமேகலையின் இன்றைய காலை தரிசனம் எனக்கு நன்றாகவே அமைந்தது, நன்றி,ராஜம்.<br />நான் படங்களை சொல்லவில்லை. ஒன்றில் கூட என் மனதில் உள்ள மணிமேகலை தென்படவில்லை. மாதவியின் பெண் என்பதால் அழகி என்றும், துறவறம் நாடியவள் என்பதால் ஒரு மேதா விலாசம், ‘அமுதசுரபி’ யாதலால் ஒரு கருணைப்பார்வை என்பது என் கற்பனை. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு கத்தோலிக்க கன்யாஸ்த்ரீ எங்கள் குடும்பத்துடன் என் சிறு வயதில் நெருங்கிப் பழகினார். பிற்காலம் ( அறுபது வருடங்கள் கழித்து) ராஜத்தின் மணிமேகலையை பற்றி படித்த போது அந்த பெண்மணிக்கு மணிமேகலையின் ஜாடை இருந்ததோ என்று வியந்து கொள்வேன்.<br />அடுத்தபடியாக, பக்தி/சரித்திர/இலக்கிய தலைவன்/தலைவி ஆகியோரின் சித்திரங்கள் வரைபவரின் மனோபாவத்தைத் தான் பெரும்பாலும் பிரதிபலிக்கிறது. அது மனிதனின் குறுகிய எல்லையை காண்பித்துக்கொடுத்து விடுகிறது.<br />இது நல்வரவு. தொடரட்டும். அடியில் ‘இது முனைவர் ராஜத்தின் காப்புரிமை. அவரின் முன் அனுமதியில்லாமல் மீள் பதிவு செய்வது சட்ட விரோதம்’என்று பதித்து விடுங்கள்.<br />அன்புடன்,<br />இன்னம்பூரான்இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com